Header Ads Widget

கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய சில விடயங்கள் . குறிப்பாக துளசி இலைகள் சாப்பிடக்கூடாது !

 


ஆரோக்கியமான  உணவுகளை  எடுத்துக்  கொள்ள  வேண்டும் .  தண்ணீர்  நிறைய  அருந்த  வேண்டும் .

எப்பொழுதும்  கவலையுடன்   , அல்லது  ஏதோ  ஒன்றை  பற்றி  சிந்தித்துக்  கொண்டே  இல்லாமல் சந்தோசமான  மன  நிலையுடன்  இருக்க  வேண்டும் .

கர்ப்பிணி  பெண்கள்  இருசக்கர  வாகனத்தில்  செல்லக்  கூடாது .

கர்ப்பிணி  பெண்கள்  உப்பு , காரம் , புளிப்பு  இது  மூன்றையும்  அதிகமாக  எடுத்துக்  கொள்ள  கூடாது .

பாக்கட்களில்  அடைத்து  விற்கப்படும்  உணவுகளை  சாப்பிட  கூடாது .

அதிக  எண்ணெய்  மற்றும்  காரம்  சேர்த்த  உணவுகளை  தவிர்த்து  விடுவது  நல்லது . 

அதிகமாக  டீ , காபி  அருந்தக்கூடாது .

அசைவ  உணவுகளை  அரை  வேக்காட்டில்  சமைத்து  சாப்பிடக்கூடாது .

பச்சை  முட்டைகள்  அல்லது  மிதமாக  வேகவைத்த  முட்டைகளைத்   தவிர்ப்பது  நல்லது .




கர்ப்பகாலத்தில்  முதல்  மூன்று  மாதங்களில்  தவிர்க்க  வேண்டிய  பழங்களில,அன்னாசிப்பழம்  சாப்பிடுவதால்  கருப்பையில்  கூர்மையான  சுருக்கங்கள்  ஏற்படுகின்றது .  இது  கருச்சிதைவுக்கு  வழிவகுக்கலாம் . 







பச்சை  பப்பாளி , பப்பாளிப்பழம்   உடலுக்குத்  தேவையான  மேக்ரோ -நியூட்ரியண்கள்  மற்றும்   வைட்டமின்கள்  நிறைந்துள்ளன   எனினும் , இதில்  உள்ள  லேடெக்ஸ்  கருப்பைச்  சுருக்கம் , இரத்தப்போக்கு  மற்றும்  கருச்சிதைவு  போன்ற  பிரச்சினைகளுக்கு  வழிவகுக்கிறது .  அதனால்  முதல்  மூன்று  மாதங்கள்  இதனை  சாப்பிடுவதை  தவிர்க்கவும் .









துளசி  இலைகளை  சாப்பிடுவதை  அறவே   தவிர்க்க  வேண்டும் . இது  மாதவிடாய்  வரவைக்கும் .  கர்ப்பம்  தரிக்க  இருக்கும்  பெண்கள் , மற்றும் கர்ப்பிணி  பெண்கள்  சாப்பிடுவதே  கூடாது .

இது  குழந்தையின்  வளர்ச்சியை  தூண்டாமல் , அதனை  தடுத்து  விடும் .  ஒரு  இலை  கூட  சாப்பிட  கூடாது .  




கருசீரகத்தையும்   கர்ப்பகாலத்தில்  சாப்பிடக்கூடாது .  இது மாதவிடாயை  வரவைக்கும் . 


Post a Comment

0 Comments