Header Ads Widget

கருமுட்டை வெளியேறி , கருவாக பதிவது எவ்வாறு !

 



இன்றைய  காலத்தில்  நிறைய  பெண்களுக்கு  கரு  பதிந்து  வளர்வதில் 

பிரச்சினைகள்  உள்ளது .  கரு  பதிவதில்லை  சீக்கிரமாகவே 

சிதைவடைகின்றது .   என்கின்ற  பொழுது  அந்த  கரு  நன்றாக  பதிந்து 

வளர்வதற்கு  நமது  உணவு  முறைகள்  எவ்வாறு  இருக்க  வேண்டும் ?  நமது

 கர்ப்பப்பையில்  ஒரு  ஆரோக்கியமான  குழந்தை  வந்து  பதிந்து 

வளர்வதற்கு  ,  அந்த  கரு  நல்லபடியாக  தன்னுடைய  தாயின்  இரத்தத்தில்

உள்ள  சத்துக்களை  எடுத்துக்  கொண்டு  , ஆரோக்கியமான  குழந்தையாக 

வளர்வதற்கு  நாம் நல்ல  சத்தான  உணவு  முறைகளை  பின்பற்ற  வேண்டும் .

வைட்டமின் C , புரதம் , இரும்புச்சத்து  , மினரல்ஸ்  ஆகிய  நல்ல  சத்தான

உணவு  முறைகளை  பின்பற்ற  வேண்டும் .

 

சாதாரணமாக   மாதவிடாய்  வந்த 15 நாட்கள்  கழித்து , கருமுட்டை 

வெளியாகும் . கருமுட்டை  வெளியான  உடனே  8 மணித்தியாலங்களில்

கருமுட்டையும் , ஆணின்  விந்தணுவும்  சந்தித்து  சேர்ந்து  அது 

கருமுட்டையில்  இருந்து  கருவாக  மாற  ஆரம்பிக்கும் .  ஸைக்கோட்  எனும்

சொல்லக்  கூடிய  கருமுட்டை  நமக்கு  ப்ளொப்பியன்  டியூப்  அதாவது 

சினைப்பை குழாயின்  வழியாக  பயணிக்க  ஆரம்பிக்கும் .  அதிலிருந்து  7-8

 நாட்களுக்குள்  அந்த  கருவாக  மாறிய , அந்த  ஸைக்கோட்  வந்து  முதல்  நாள்

கருமுட்டை   வெளியானதில்  இருந்து  8 மணித்தியாலத்தில்  சேர்ந்து  அது

கருவாக  மாறிவிடுகிறது .  அது மாறி  7 நாள்  வரைக்கும்  தன்னுள்  பல

மாற்றங்களை  கொண்டு  வருகின்றது . அது  ஒரு  நிலையை  அடையும் .  அந்த

மாதிரியான  நிலையை  அடைந்துக்  கொண்டே  சினைப்பைய்  குழாயில்

இருந்து  பயணித்து  8 வது  நாளில்  கர்ப்பப்பையில்   கரு  பதிந்து  வளர

ஆரம்பிக்கும் .

 

அது  எப்பொழுது  கர்ப்பப்பையில்  பதிகின்றதோ   அந்த  நேரம்  வந்து  அந்த

கருவை  ஏற்றுக்  கொள்ள  , முழுமையான  தகுதியோடு  அந்த

என்றோமெட்டிரியல் லைனிங்  வந்து  தயாராக  இருக்கும் . அது  சென்று

பதிந்து  8 நாள்  வளர  ஆரம்பிக்கும்  பொழுதுதான்  நமக்கு  அதிலிருந்து  கரு

வந்து  தாயின்  உடைய  இரத்தத்தில்  இருந்து   சத்துக்களை   எடுத்துக்

கொண்டு  வளர  ஆரம்பிக்கும் . அந்த  நிலையில்  தான்  நீங்கள்  யூரின்  டெஸ்ட்

HCG   எடுத்து  கர்ப்பம்  அடைந்து  உள்ளீர்களா   என்பதை  நாம்  தெரிந்துக்

கொள்ள  முடியும்அதாவது  இவ்வளவு  நிகழ்வுகளை  கடந்துத்தான்   அந்தக் 

கரு  பதிந்து  வளர்வது  உள்ளது . 

 

கரு  உருவாக  வேண்டும் . உருவாகிய  அந்தக்  கரு  தன்னுள்  பல  மாற்றங்கள்

அடைந்து  , ப்ளஸ்ட்ரோ சிஷ்டா  ஆக  மாற   வேண்டும் . அது  சினைப்பை

குழாய்  வழியாக  பயணித்து  வந்து ,  நமக்கு  கருப்பையில்  பதிந்து  வளர

 வேண்டும் .  அந்தக்  கருப்பையில்  பதிந்த  பிறகு   தாயின்   உடைய

 சத்துக்களை  இரத்தத்தின்  ஊடக  எடுத்துக்  கொண்டு  கரு  வளர

ஆரம்பிக்கும் .   இவ்வளவு  விடயங்கள்  நடக்க  நமது   உடலுக்கு  நிறைய 

சத்துக்கள்  தேவைப்படும் .  அதற்குறிய  சிறந்த  உணவு  முறைகளை

கடைபிடிப்பது  சிறந்தது .

 

 

 


Post a Comment

0 Comments